இது நடுகல் மாவட்டம் தமிழகத்திலேயே மிக அதிக நடுகற்களை கொண்ட ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி கண்டிப்பாக இருக்கும்.நடுகற்களின் வரலாறு நெடியது அந்த வகையில் நாடுகளின் வகைகள் நடுகற்களில் அத்தனை வகைகளும் கிருஷ்ணகிரியில் உண்டு ஆயிரம் ஆண்டு முதல் 250 ஆண்டுகள் வரையிலான நடுகற்கள் நம்முடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படுகின்றன.  நமது மாவட்டத்தின்  வீரம் . கலை பண்பாடு , வாழ்வியல் முறைகள் ஆகியவற்றினை நமக்கு சொல்கின்றன . இதில் கல்வெட்டுடன் கூடிய நடுகற்களும் உண்டு அவை அப்பகுதியை ஆண்டவர்கள் மற்றும் நடுகல் பற்றிய விவரங்களை கூறும் 

இடம்       -      ராமநாயனப்பள்ளி 
வட்டம்    -      கிருஷ்ணகிரி 
மாவட்டம் -    கிருஷ்ணகிரி 
வகை        -    புலிகுத்திப்பட்டானகல்
காலம்     -      15 ஆம் நூற்றாண்டு
விளக்கம்        இது ஆநிரை காத்திலிலோ அல்லது ஊர் காத்தலிலோ புலியோடு போராடி புலியை கொன்று தானும் இறந்த ஓர் வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் அந்த வீரன் இறந்ததால் அவனின் இரு மனைவியரும் தீ பாய்ந்து இறக்கின்றனர்
அந்த காலத்தில் வேட்டைக்கு செல்கையில் வேட்டை நாய்களை அழைத்துச்சென்றதற்கும் இது ஆதாரமாக உள்ளது. அவன் பயன்படுததிய வாள் மற்றும் வில் ஆகியன நடுகல்லில் காணப்படுகின்றன. கிளிகள் வளமையின் சின்னமாக கருதப்பட்டாலும் இந்த இடத்தில் இன்னும் கிளிகள் இருப்பது குறிப்பிட தக்கது.



படம் -2

பன்றிகுத்திப்பட்டன் கல் எர்ரசிகரல்லி  கல்வெட்டுடன் அமைந்துள்ளது 


படம் -3

 கி.பி 13ம் நூற்றாண்டு நடுகல் 7 அப்பகுதியில் உள்ளன . அவை அந்த இடத்தில்              மார்கழி மாதம் 27ஆம் தேதி புதுபற்று நாட்டு தொகரப்பள்ளியில்   அதியமான் படைஎடுப்பின் போது இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்டது  


 

படம் -4

ஊத்தங்கரை வட்டம் அங்குத்தி ஜூனைக்கு செல்லும் வழியில் சாலையின் வலப்புறம் நடப்பட்டுள்ளது. மக்கள் வழிபடுகின்றனர் காலம்: சுமார் கி.பி.8ம் நூற்றாண்டு .1200 வருட பழமையானது.

நுளம்பன் மகன் சிவமாறன் ஊரழித்தபோது போயைய்யன் மகன் துட்டப்பன் இறந்துள்ளான். இவனது தம்பி முளித்தயன் கல் எடுப்பித்துள்ளான். இதுதான் கல்வெட்டு செய்தி

------------------------------------------------------------------------------------------------

படம் -5

காவேரிப்பட்டிணம் பணகமுட்லு வட்டெழுத்து நடுகல் 

"ஒரு வீரன் போரில் இருவரை கொன்று தானும் இறந்த" செய்தியை இந்த வட்டெழுத்து கல்வெட்டு தெரிவிக்கிறது.


படம் -6

பாம்பு குத்திபட்டான் நடுகல் உண்டியல் நத்தம் 


படம் 7

நாட்டான் கொட்டாய் 4 மனைவியர். அப்போதய சமுக நிலையில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டது என்பது இதன் மூலம் அறியலாம் .



படம் -8


11  ஆம் நூற்றாண்டு  குந்தப்பள்ளி நடுகல் புலியைக் குத்தி வீரன் ஒருவன் இறந்த செய்தி மற்றும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதில் ஒன்று இறந்த செய்தி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. (வேப்பனப்பள்ளி )

படம் -9

              
                                 நவகண்டம் 
நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ கொற்றவை எனும் பெண் தெய்வத்தை நோக்கி அறுத்து தன்னையே பலி கொடுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது வாளால் தலையை மட்டும் துண்டித்து தன்னை தானே பலி கொடுத்து கொள்வது.




சென்னசந்திரம் 


                                                                        படம் -10

இசை கலைஞர்கள் நடுகல்  அருங்காட்சியகம் 

இசை கலைஞர்கள் நடுகல் காவேரிப்பட்டிணம்

இவைகள்  செறிந்த மக்கள் வாழ்ந்த  மாவட்டம் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது அதுமட்டுமில்லாமல் இது எல்லைப் பகுதியில் இருப்பதால் அதிகமாக போர் நடக்கும் இடமாக இருந்திருக்கிறது என்பதும் 

நடுகல் வழிபாடு என்பது சங்ககாலதில் இருநது தற்போது வரை நடைபெற்று வருகின்றது பொங்கல் அன்று ஊரிர் உள்ள அனைத்து நடுகல்லுக்கும்  வழிபாட்டுடன் படையலும் வைக்கப்படுகிறது நமது மாவட்டத்தில் 



ஒருகாலத்தில் குத்துக்கல் காணப்படாத மாவட்டமாக கருதப்படடது வியப்பளிக்கும் வண்ணம் மிகப்பெரிய குத்துக்கல் மற்றும் பல்வேறு இடங்கலில் குத்துக்கல் கண்டறிப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது . அதில் சிலவற்றினை பார்ப்போம் .

.2000 ஆண்டுகள் பழமையான குத்துக்கல் சாமந்த மலை கிருஷ்ணரி ஒன்றியம் குத்துக்கல் மற்றும்  நெடுங்கல் என அழைக்கப்படும் இவை  பெரிய நிலைக்குத்தாக நாட்டப்படுகின்ற தனிக் கல்லாகும். இவைகள்  வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும் .இவைகள் சில இன்னும் வழிபாட்டில் இருக்கின்றன 

குட்டப்பள்ளி குத்துக்கல் 1
குட்டப்பள்ளி குத்துக்கல்  2

 ஜெகதாப் குத்துககல் காவேரிப்பட்டிணம் 

                        ஜெகதாப் குத்துககல் 

2000 ஆண்டுகள் பழமையான குத்துக்கல் சாமந்த மலை 

பஸ்தலப்பள்ளி -வேப்பணப்பள்ள ஒன்றியம் 
பி.கே பெத்தனப்பள்ளி -கிருஷ்ணகிரி
பி.கே. பெத்தனப்பள்ளி 

பீமாண்ட பள்ளி -வேப்பணப்பள்ளி

சஜ்சலப்பள்ளி குத்துககல் - (தாசரிப்பள்ளி) கிருஷ்ணகிரி 

சந்துர் குத்துக்கல் -பர்கூர் ஒன்றியம் 
செவ்வாய்சந்தை குந்துக்கல் -வேப்பணப்பள்ளி அந்த இடத்தில் 3 குத்துக்கற்கள் உள்ளன 

நலகுண்டலப்பள்ளி கற்குவை

நலகுண்டலப்பள்ளியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அன்பழகன் மற்றும் பள்ளிமாணவர் திவாகர் ஆகியோர் அருகே உள்ள மலையுச்சியில்  (பந்தல் பாறை) வித்யாசமாக கற்களைக் கொண்டு ஏதோ அமைத்துள்ளார்கள் என்று கூறினார் அந்த இடத்தை குழு 3 கி.மீ தொலைவு நடந்து சென்று ஆய்வுசெய்த பின்பு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில் அவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின்  வாழ்வியல் முறைகளை விளக்கும் பெருங்கற்கால நினைவு சின்னங்கலென உறுதி படுத்தினார்.

பெருங்கற்கால கற்குவை வட்டவடிவில் இரண்டும்,   சதுரவடிவில் இரண்டும் எண்கோணவடிவில் ஒன்றும் காணப்படுகிறது. வட்டவடிவ கற்குவை ஆறு அடி உயரமும் பத்து அடி சுற்றளவும் கொண்டதாக காணப்படுகிறது. அக்காலத்தில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்படும் பல்வேறு வகையான நினைவு கட்டமைப்புகளில் கற்குவையும் ஒன்று. கற்களை உடைக்க இப்போதுள்ளது போன்ற கருவிகள் இல்லாத காலத்தில் கிடைத்த மற்றும் உடைந்த கற்களைக் கொண்டு சரியான அளவில் சதுர வடிவிலும் . எண்கோணவடிவிலும் (எட்டுபட்ட). வட்டவடிவிலும் சிறப்பான முறையில் அமைத்துள்ளனர். இது போன்ற கற்குவைகள் பாலகுறி அருகே உள்ள மலைகளிலும் சிதைந்த நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எனகூறினார்

ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில் இவை பெரும்பாலும் மலையின் உச்சிப்பகுதியில் அமைக்கப்படுகின்றன. பெருங்கற்கால காலகட்டத்தில் கற்களைக் கொண்டு இறந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்களை அமைப்பது வழக்கம் அதுபோன்ற கற்குவைத்தான் இது. சில ஒழுங்கற்ற வகையில் கற்களை குவியலாக குவிக்கும் முறையும் உண்டு ஆனால் இவ்விடத்தில் ஒழுங்கான கட்டமைப்பு காணப்படுகிறது. எற்காடு மலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன . மலைவாழ் மக்கள் இவற்றினை ஒருகாலத்தில் குறிப்பிட்ட நாட்களில் வழிபட்டு வந்ததாகவும் செவிவழி செய்திகள் கூறப்படுகின்றன. 

  கிருஷ்ணகிரி மாவட்ட  பாறை ஓவியங்கள் 



தமிழகத்திலேயே அதிக பாறை ஓவியங்கள் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரியாகத்தான் இருக்கும் இதற்கு முன்னர் இருந்த ஆய்வாளர்கள் மற்றும் எங்களுடைய வரலாற்று தேடலில் கிடைத்தவை வைத்து பார்க்கும் போது அந்த கூற்று மெய்யே 


மல்லப்பாடி
ஐகுந்தம் புலிப்பாறை 


பி.கே.பெத்தனப்பள்ளி (பெரியகோட்டப்பள்ளி )கிருஷ்ணகிரி 


ஜெகதாப் -காவேரிப்பட்டிணம் 

பெத்ததாளாப்பள்ளி - இம்மலையில் 8 பகுதிகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன -கிருஷ்ணகிரி ஒன்றியம் 
ஆலப்பட்டி -நகக்கல்பட்டி ஶ்ரீராமன் மலை பாறை ஓவியமும் குகையும் 





சிக்கபூவத்தி சி.கெட்டுர் பாறை ஓவியங்கள் -கிருஷ்ணகிரி ஒன்றியம் 




மேல்பட்டி 

சென்னானுர்

ஆண்டிமலை 

கருஞ்சாந்து ஓவியம் கொங்கனப்பள்ளி



பையனப்பள்ளி சிவப்பு நடன ஓவியம் 

ஆலப்பட்டி - ஶ்ரீராமன் மலை கவி 



சாம்பல்பட்டி நடுகல் வீட்டில் ஓவியம்  ஓவியம்


சூலக்கல் சூலம் சிவனின் அம்சமாக வழிபாட்டில்


கிருஷ்ணகிரி அணைக்கல்வட்டங்கள் 



பீமாண்டபள்ளி கல்வட்டம் 

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் 

கல்வெட்டுகள் நமக்கு வரலாற்று உண்மைகளை வெளிகொண்டுவர பேருதவியாககவும் , மறுக்கமுடியாத ஆதாரமாகவும் உள்ளன 


பணகமுட்லு -காவேரிப்பட்டிணம் -பனகமுட்லு என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல்  என்று அழைக்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. அப்போது இந்த ஊரின்மீது படையெடுத்து வந்த தாமய தண்ணாக்கன் என்பவனது படையை அழித்து தானும் இறந்து போனான் காமிண்டர் கோவிந்தாண்டை ஆந்தையந் அடியான் பணிக்கமாராயன் மகன் படலன் என்ற வீரன். இவனது உயிர்த் தியாகத்தினை போற்றும் வகையில் இவனது உருவத்தை கல்லில் வடிக்கச செய்தார் கோவிந்தாண்டை. காணிகாத்தான் இக் கல்லை நட்டு வைத்தார் என்ற செய்திகளைத் தெரிவிக்கிறது

:     .

 400 வருடங்களுக்குமுன்னதாகும் செல்லபிள்யார்க்கு 2 கழனியும்                         

பேராயிரஉடையாருக்கு ஒரு கழனியும் தனமாக கொடுத்தததை இக்கல்வெட்டு கூறுகிறது


                                                                  சின்ன ஒரப்பம் ஏரிக்கல்வெட்டு



தம்மாண்டரஅள்ளி -வேப்பனப்பள்ளி

கி.பி 13ம் நூற்றாண்டு

வீர ராஜேந்திரனின் 8 வது ஆட்சியண்டில் அத்திமல்லன் பூர்வாதராயன் பேரில் இருந்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிகக்குழு விரியூர் நாட்டில் கோமறு உடையார் என்ற கோயிலில் திருப்பணி பூசை முதலியவற்றை செய்ய பணம் தானமளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

நடுகல்லுடன் கூடிய கல்வெட்டு குட்டப்பள்ளி வேப்பனப்பள்ளி

சுமார் கி.பி 17 நூற்றாண்டு 350 ஆண்டுக்குமுன்

   புதுப்பற்றில் உள்ள பல்லேரிப்பள்ளி தலைவனின் உடன் சென்ற மெய்காப்பாளன் குதிரையுடன் இறந்த செய்தியையும் அவனுக்கு ஊர் மக்கள் தானம் கொடுத்ததை குறிக்கிறது.







குண்டேப்பள்ளி -வேப்பனப்பள்ளி 

கி.பி.1103 முதலாம் குலோத்துங்கள் காலத்தியது

காவல் காப்பதில் வல்லவனான ஊர் காமிண்டர் மகன் கலிஞ்சிறை தம்மசெட்டி கலந்தகமங்கலம் என்ற இடத்தில் நடந்த தொறுபூசலில் இறந்துள்ள நிகழ்வினை கூறுகிறது









சின்னகொத்துர் பெருமாள் கோவில் கல்வெட்டு 

சின்னகொத்தூர் சாலையோரம் உள்ள பெருமாள் கோயிலின் சிதைந்த பாகங்களில் ஒரு குமுதக பட்டையில் உள்ளது. 

காலம்:கி.பி.13ம் நூற்றாண்டு

திரிபுவனமல்ல பூர்வதராயன் திருஅத்தியூர் பெருமாளுக்கு தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது.


வெங்கிலிகானப்பள்ளி கல்வெட்டு -கிருஷ்ணகிரி 
மேலுமலை துர்கம் கல்வெட்டு (வேப்பனப்பள்ளி)

மேலுமலை பஞ்சாத்திற்குட்பட்ட பி.ஜி துர்கம் பெருமாள் கோவில் மலையடிவரத்தில பெரிய பாறையில் உள்ள கல்வெட்டு 3 பகுதிகளாக வெட்டப்பட்டுள்ளது. நடுவில் சக்கரமும் இரண்டு பக்கமும் கண்டபேருண்டம் மற்றும் புலியின் உருவங்கள் உள்ளன.

   கி.பி.1423   விஜய நகர அரசர் மன்னன்         விஜயராய உடையார் காலத்தியது:பீமாண்டபள்ளி ஊரின் கிழக்கு பக்கமுள்ள மாரியம்மன்கோவில் எதிரே உள்ளது


           நாகேய நாயக்கர் ஆட்சி சிறக்கவேண்டி அவர் ஆட்சிக்கு உட்பட்ட 12 ஊர்களிலிருந்து காமிண்டர் முதலானவர் கூடி வம்மனவாவி என்ற மலையில் திருவேங்கடப்பரை ப்ரதிஷ்டை செய்து திருக்கலியாணம் செய்து பூசைக்காக நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.


பீமாண்டபள்ளி கல்வெட்டுகள்



பெருமுகை கல்வெட்டு காவேரிப்பட்டிணம் 
பெருமுகைப்பற்று கண்டுபிடிப்பு

கல்வெட்டுகளில் பெருமுகைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில் அந்த பெருமுகைப்பற்று இருந்த இடம் தட்டக்கல் மலைகளின் நடுவே உள்ள சுனை அருகே கண்டுபிடிக்கப்பட்டது வரும் இடம் கண்டுபிடிப்பு.

காலம்:  கி.பி 13 ம் நூற்றாண்டு

 இந்த பெருமுகையில் பைரவர் கற்சிலையை செய்து எழுந்தருளிவித்து சுனை ஒன்றையும் செப்பனிட்டு இத்தெய்வத்தின் திருப்படிமாற்றுக்காக (இறைவனுக்கு படைக்கும் அரிசி முதலிய பொருட்களுக்காக) உதப்பிக்குட்டை என்னும் ஏரியை மான்வேலி என்னும் ஊரைச் சேர்ந்த பல்லவரையனான மலையன் என்பவன் தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. இவர் செய்தளித்த பைரவர் சிற்பமானது இன்றும் பைரப்பன்கோயிலில் வழிபாட்டில் உள்ளது. இக்கல்வெட்டின் இடது மேற்புறம் பசுவும் கன்றும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.

பெருமுகை என்ற பெயர் இப்பகுதியில் கிடைத்த கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும் பெருமுகை எந்த இடத்தைக் குறிக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. இக்கல்வெட்டில்தான் இப்பெருமுகையில் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தட்டக்கல் மலையே அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது. இம்மலையை வடக்கிலிருந்து பார்த்தால் ஒரு பூவின் மொட்டுபோல் இருப்பதைக் காணலாம். அருகில் உள்ள பெரியமலையும் மொட்டு போலவே தோற்றமளிக்கிறது. முகை என்பது மொட்டைக் குறிக்கும். பெரிய மொட்டு போன்ற மலைகளைக் கொண்ட காரணத்தால் இப்பகுதியானது பெருமுகை என அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.    

அதியான்களைப்போன்று மலையமான்களும் சங்க காலத்திலிருந்து ஆண்டுவந்த குறுநில மன்னராவார்கள். இவர்கள் திருக்கோயிலூர் பகுதியை ஆண்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இராசராசனின் தாயான வானவன் மாதேவியும் மலையமான் குலத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் பல்லவரையர் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர். இக்கல்வெட்டுக் குறிப்பிடும் பல்லவரையனான மலையன் மான்வேலி என்ற ஊரின் தலைவனாவான். மான்வேலி என்ற ஊர் தற்போது எதுவெனத் தெரியவில்லை.

உதப்பிக்குட்டை என்பது நீர் ஊற்றெடுத்து ததும்பிவழியும் குட்டை என பொருள் கொள்ளலாம்.   உதப்புதல் என்றால் பேசும்போது எச்சில் தெரித்தலைக் குறிப்பதாகும்.   ஊத்தங்கரை வட்டம் கொண்டம்பட்டி என்ற ஊரில் உள்ள கி.பி.9ம் நூற்றாண்டைச் சேரந்த கல்வெட்டு ஒன்றில் உதப்பியூர் என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது.




1904  கிருஷ்ணகிரி கோர்ட் தொடர்பான கல்வெட்டு 



1907 கிருஷ்ணகிரியின் முதல் லைப்ரேரி பழையபேட்டை (பரவேசுஐயர் தானமாக கொடுத்தது)





உலகப்போரில் வீரமரணம் அடைந்த கிருஷ்ணகிரி வீரர் நினைவுக்கல் -1913-19

ஐகுந்தம் கன்னட கல்வெட்டு

அத்திகோசத்தார்- நாகமலை அடிவாரம் 

கிருஷ்ணகிரி ஒரு எப்போதுமே வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமாக இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன அந்த வகையில் தற்போது உள்ளது போலவே வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்துள்ளதற்கான ஒரு வரலாற்று சான்று   கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தள்ளது தற்போது போலவே அக்காலத்திலும் கிருஷ்ணகிரி முக்கிய வணிகபாதையாக இருந்துள்ளதற்காக ஆதாரங்கள் கிடைத்தவாறு உள்ளன அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கொண்டப்பநாயக்கனபள்ளி என்ற ஊரின் அருகே நாகமலைக்கு  தெற்கு பகுதியில் (Latitude: 12.495487, 78.347874   . Longitude: 78.347874 . கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டது அப்போது குழுவின் வழிகாட்டி அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் அங்குள்ள பாறையில் ஒரு யாணைமேல் ஓர் வீரன் அமர்ந்தமாறு உள்ள பாறை செதுக்கலை காண்பித்தார். அதில் இரண்டு யானைகள் காணப்படுகின்றது. இதில் மேலுள்ள யானை வேகமாக ஓடுவது போல் கால் அமைப்பும் வேகமாக ஓடும் போது வால் மேல்பக்கமாக நிமிர்ந்து உள்ளது போல் அழகாக காட்டப்பட்டுள்ளது. யானையின் தந்தங்களும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது ஓடும் போது துதிகையின் முன் பகுதி சுருட்டி வைத்துள்ளது அந்த யானை . அதன் மேல்  அத்திகோசத்தார் எனும் வணிகர் படைக்குழுவின் தலைவர் வேல் அல்லது ஈட்டி  வைத்துக் கொண்டு ஒரு பெரு வணிக வழியை பாதுகாக்கும் வகையில் இருந்ததை குறிக்கும் வகையில் இது அமைந்திருக்கலாம் . இந்த இடத்தில் வணிகர்கள் தங்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இந்த அத்திகோசத்தார் தலைமையிலான படைகள் இருந்துள்ளதை இது காட்டுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை இந்த ஒரு இடத்தில் தான் காணப்பட்டுள்ளது. இங்கு வணிகர்கள் பயணம் செய்ததையும் வணிக சந்தை இருந்ததையும் உறுதி செய்கிறது. வரலாற்றில் தென்னிந்திய வணிகர்கள் தங்களுக்கெனப் படை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். அகநானூறு 89 ஆம் பாடல் வணிகர்களுடன் சென்ற வீரர்களைப் பற்றிக் கூறுகிறது. ஆறலைக் கள்வர்கள் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வணிகர்கள் தங்களுக்கெனப் படை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அத்திகோசத்தார் வியாபாரிகள் வைத்திருந்த படைப்பிரிவினர் ஆவர். மேலும் அத்திகோசத்தார் பற்றிய செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் பெருவழி ஓரத்திலேயே கிடைக்கின்றன. இவர்கள் பெருவழிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். பெருவழிகளில் உள்ள இப்படைவீரர்கள் வாணிகத்திற்கென வரும் , வந்து தங்கியிருக்கும் வணிகர்களிடம் சுங்கம் வாங்கவும், வணிகர்களையும், வணிகப்பொருள்களையும் பாதுகாக்கவும் செய்தனர். மேலும், அத்திகோசத்தாரிடம், அரசனால் தானங்களைச் செயற்படுத்தும் அல்லது பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தன. அத்திகோசத்தரின் உருவம் மிகவும் அரிதானது. தமிழகத்திலே இது வரை 4 வரை கண்டறிந்து இருக்கலாம்.

அதேப்போல் தொல்காப்பியம் நுதலியபொருள் இவ்வியலில்  52 ஆம் பக்கத்தில், அத்திகோசத்தார் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிகழ்வில் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் அரசு ஓட்டுனர் மற்றும் கோவிந்தராஜ் அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார். ஆய்வுக்குழுவின் விஜயகுமார் , ரவி, மதிவாணன் , தமிழ்செல்வன் ,  ஆகியோர் இந்த ஆய்வு நிகழ்வில் கலந்து கொண்டணர்


சின்னகொத்துர்

750 வருடபழமையான கிருஷ்ணர்  கிருஷ்ணரி 
பழமையான மண் விநாயகர் பையூர் 


ஆலப்பட்டி பழமையான ஆஞ்சனேயர்




சின்னகொத்துர்

650 வருடங்கள் பழமை கொண்ட காலபைரவர் கோவில் 



சூளகிரி வரதராஜர் கோவில் கலைநயம் 



-------------------------------------
மல்லப்பாடி ராமசாமி கோவில் 
வாலிமுது அம்பு எய்யும் சிற்பம் 


அழகிய உட்புறம் 
--------------------------
மல்லப்படியின் 650 வருட பழமையான பெயரான மலைப்பாடி கல்வெட்டு தாங்கிய சிவன்கோவில் 




வரட்டனப்பள்ளி நரசிம்மர் கோவில் 
மத்வபிருந்தாவணம் ஐகுந்தம் 
1792 - தேவாலையம்  கிருஷ்ணகிரி 


14-11-1900







வேப்பனப்பள்ளி குளம் மாவட்டத்திலே பெரிய குளம்


1846 ல் ஓசூர் சந்திரசூடேஷ்வரர் கோவிலில் இருந்த நந்தி

மூங்கில்பட்டி கெந்தியம்மாள் மலை 



கல்லகுறுக்கி துவக்கவிழாவில் காமராசர்





அங்குசகிரி சங்ககால நிலை ஆய்வு


Comments